பசில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல்!

நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட பிணை மனு உத்தரவை இரத்துசெய்து, சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திவிநெகும திணைக்களத்துக்கான நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த மூன்று மனுக்களையும் ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன, வழக்கின் பிரதிவாதிகளான சட்டமா அதிபர் மற்றும் நிதிக் குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -