இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, அரசியல் பங்கேற்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் சங்கக்காரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.
இது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த சங்கக்காரா, ஆமாம். நானும் இது பற்றி கேள்விபட்டேன். 'கலா வேவா' பகுதியில் நான் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் இது எல்லாம் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் கிரிக்கெட்டை முழுவதும் விட முடியும் என்று நினைக்கவில்லை. அதனால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவேன்.
ஆனால் இலங்கை அணியில் விளையாட முடியாது என்பது கடினமான விடயம் ஆகும். அதே சமயம் இறுக்கமான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இனி இல்லை என்று தெரிவித்துள்ளார்.