இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளருக்கு கண்டியில் விருது..!

அலுவலக செய்தியாளர்-

மூக சேவை, கலை இலக்கியம் , ஆய்வியியல் , ஊடகவியல் போன்ற துறைகளில் பணியாற்றிவரும் எமது இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பின் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளரும் , அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் பொதுச் செயலாளருமான ; தேசமாண்ய ஜலீல் ஜீ அவர்கள் கண்டி மாநகரில் பொன்னாடை போர்த்தி , பதக்கம் அணிவித்து , விருதும் சான்றிதழும் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

மலையக‌ கலை இலக்கிய மன்றம் -கண்டி கெப்பட்டி பொல - ஞாபகார்த்த மண்டபத்தில் 2015.06.28 ஏற்பாடு செய்திருந்த " இலங்கையில் புகழ் பெற்ற சமூக சேவை-கலை இலக்கியவாதிகளினை " பாராட்டிக் கௌரவிக்கும் தேசிய நிகழ்வின் போது வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ "கௌரவ இரத்தின தீபம் விருது" விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட -உலகப் புகழ் சுழற்பந்து வீச்சாளர் ; முத்தையா முரளிதரனின் தகப்பனார் சமூக ஜோதி முத்தையா அவர்களினாலும் ஏனைய கௌரவ அதிதிகளினாலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -