எஸ்.சிவகாந்தன்-
ஊவா மாகாணத்தின் 81 தமிழ்மொழி மூல பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பெருந்தோட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட 599 ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண தமிழ்க்கல்வி , தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் வடிவேல் சுரேஷின் தலைமையில் இன்று (29) பதுளை நூலக சேவை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாகாண அமைச்சர் ஆனந்த குமாரசிரி மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஜயந்த கன்னங்கர , ஆர்.எம் ரட்னாயக முன்னால் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கல்வி அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.எல் ராஜதாச, மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டு பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




