மோசடிகளை மறைத்துக்கொள்வதற்காக அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சி - சந்திரிக்கா

நாட்டில் அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிக்கொள்வதற்கு முயற்சிப்பது தங்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை மறைத்துக்கொள்வதற்கே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளான இன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கண்டி விகாரைக்கு சென்று மத வழிப்பாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மறைத்து கொள்வதற்காகவே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -