எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க அல்-கிம்மா நிறுவனத்தினால் 50 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு இன்று மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.சலீம் தலைமையில் காரியாலத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.ஹாரூன், அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர், அல்-கிம்மா நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் மௌலவி எம்.ரீ.எம்.நபாஸ் மற்றும் பயனாலிகள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




