தொழிலாளர்களை கௌரவிக்கும் NFGGயின் மே தின நிகழ்வு மூதூரில்!

மேதின நிகழ்வுகளை ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையிலும் நடாத்தி வரும் NFGG, அதன் மற்றுமொரு மேதின நிகழ்வினை மூதூரில் நடாத்தியது.

கடந்த மே 03 ஆம் திகதி மூதூரில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

NFGGயின் மூதூர் பிரதேச செயற்குழுவின் தலைவர் Dr. ஷாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் நஜா முஹம்மட் ஆகியோரும் கலந்துகொண்டு விசேட உரையாற்றினர்.

இந்நிகழ்வில் NFGGயின் மூதூர் பிரதேச செயற்குழு உறுப்பினர்களான MIM.ஜெஸ்மி, M.ஷிப்லி, AM.மாஹிர், MACM.சியாம், M.றினோஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நஜாமுஹம்மட் மற்றும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் நாட்டின் சமகால அரசியல் தொடர்பிலும் NFGGயின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவான விளக்கங்களை வழங்கினர்.(ந)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -