ஜனாஸா நலன்புரி செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

அபு அலா -
ட்டாளைச்சேனையை உள்ளடக்கிய 'ஜனாஸா நலன்புரி செயற்திட்டம்' ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) மாலை அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.அப்துல் முனாப், ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஏ.எல்.அனீஸ், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எம்.வாகிட், கிழக்கு மாகாண முதலமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பழீல், அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்பர், அதிபர்களான ஏ.எல்.பாயிஸ், எம்.ஐ.எம்.சலாம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை ஜனாஸா நலன்புரி செயற்திட்டம் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்சேக் என்.ஜீ.ஏ.கமால்டீன் நிகழ்த்தி வைத்தார்.(ந)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -