அமைச்சு பதவிகளை கைவிடுவது என் தீர்மானித்தால் கைவிட தயார் -மகிந்த சமரசிங்க

மைச்சு பதவிகளை கைவிடுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தால், அமைச்சு பதவியை கைவிட தான் தயாராக இருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாக அவரை மேற்கோள்காட்டி கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைச்சரின் இதுதொடர்பாக தனது நெருங்கிய நண்பரொருவருடன் கலந்துரையாடியிருக்கின்றார். 

அதில்,ஒப்பந்தங்களை போடுவதற்காக நான் அமைச்சு பதவியை பெறவில்லை. நாட்டில் நடக்கும் அபிவிருத்திக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒத்துழைப்பை பெறவேண்டும் என்று ஜனாதிபதி எண்ணியிருப்பார். இதன் காரணமாகவே எமக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

அமைச்சுப் பதவிகள் கிடைக்காதவர்களுக்கு மனவருத்ததும் அதிருப்தியும் இருக்கக் கூடும்.

நான் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவில்லை. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றேன்.

அமைச்சு பதவிகளை கைவிடுவது என கட்சி தீர்மானித்தால், அமைச்சு பதவிகளை கைவிட நான் தயாராகவே இருக்கின்றேன்.

பல வருடங்களாக இலங்கையை ஏறெடுத்து பார்க்காத வெளிநாடுகள் தற்போது இலங்கைக்கு வந்து உதவிகளை செய்வதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -