மட்டக்களப்பு மாவட்ட நடமாடும் சேவையில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு!

ட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்களிடத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கானும் பொருட்டு கிழக்கு மாகான சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் உத்தரவின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை இன்று (14) காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஆரம்பமாகி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பாகங்களில் இருந்தும் பொது மக்கள் வருகை தந்து தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நடமாடும்சேவையில் கிழக்கு மாகாண சபை சகல அமைச்சர்களும், அவர்களின் அதிகாரிகளும், சகல திணைக்களங்களும் கலந்து கொண்டு பொது மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கான தீர்வினை உடனே வழங்கி வைத்தனர்.

இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆயிரத்துக்கு (1067) மேற்பட்ட முறைப்பாடுகள் சமர்பிக்கப்பட்டு அதில் 672 முறைப்பாடுகளுக்கான தீர்வு உடனடியாக வழங்கி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட முறைப்பாட்டில் 350 முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவிருக்கிறது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதிகளாக: கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலபதி, விவசாய அமைச்சர் துரை ராஜசிங்கம்.

மற்றும் விஷேட அதிதிகளாக:கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஷ கலபதி, பிரதி தவிசாளர் பிரசன்ன, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜா தேவி சார்ள்ஸ் ஆகியோருடன் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களுக்கான தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க ஒத்துழைப்பு வழங்கிய கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அனைவருக்கும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நன்றியினைத் தெரிவித்தார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -