ஒரு கோடி ரூபா பெறுமதி மாணிக்க கற்களுடன் ஒருவர் கைது!

ரு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாய்லாந்தின் - பெங்கொக் நோக்கிச் செல்லவிருந்த நபரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரின் இடுப்பு பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 மாணிக்க கற்கள் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் விமான நிலைய சுங்கப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -