இலங்கையில் பெண்கள், யுவதிகள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு வருகின்றமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.
நாடு பூராகவும் எல்லா சமூகத்தினர் மத்தியிலும் இந்த நிலைமையானது பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதாகவுள்ளது. எனவே இத்தகைய சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டுமானால் சவூதியில் போன்று குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் மரணதண்டனை விதிக்க வேண்டும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமை ச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான பாலியல் வன்முறையானது நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர் பாலியல் வன்முறைகளுடன் கூடிய கொலைகளும் இடம்பெற்று வந்தமை அங்கு பெரும் பீதியை உருவாக்கியது. அதேபோல் வடமாகாணத்திலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பாலியல் வன்முறைகளுடன் கூடிய கொலைகள் அங்கு வாழும் மக்களிடத்தில் ஒருவித பயத்தினையும் பீதியையும் தோற்றுவித்துள்ளது. உறவினர்களாலும் அயலவர்களாலும் இந்த வன்முறை மேற்கொள்ளப்படுவதானது சமூக சீரழிவை ஏற்படுத்துவதாகவும் சமூக வாழ்வு சீர்குலைக்கப்படுவதாகவும் உள்ளது.
வித்தியா படுகொலை நடந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளை கிளிநொச்சியிலும், ஊறணியிலும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை இடம்பெற்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த நிலைமைகளை தொடர்ச்சியாக அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. இதற்கான தண்டனைகள் அதி கரிக்கப்படுவதுடன் சவூதியில் போன்று பொது இடத்தில் மரணதண்டனை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
(வீரகேசரி)
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான பாலியல் வன்முறையானது நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர் பாலியல் வன்முறைகளுடன் கூடிய கொலைகளும் இடம்பெற்று வந்தமை அங்கு பெரும் பீதியை உருவாக்கியது. அதேபோல் வடமாகாணத்திலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பாலியல் வன்முறைகளுடன் கூடிய கொலைகள் அங்கு வாழும் மக்களிடத்தில் ஒருவித பயத்தினையும் பீதியையும் தோற்றுவித்துள்ளது. உறவினர்களாலும் அயலவர்களாலும் இந்த வன்முறை மேற்கொள்ளப்படுவதானது சமூக சீரழிவை ஏற்படுத்துவதாகவும் சமூக வாழ்வு சீர்குலைக்கப்படுவதாகவும் உள்ளது.
வித்தியா படுகொலை நடந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளை கிளிநொச்சியிலும், ஊறணியிலும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை இடம்பெற்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த நிலைமைகளை தொடர்ச்சியாக அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. இதற்கான தண்டனைகள் அதி கரிக்கப்படுவதுடன் சவூதியில் போன்று பொது இடத்தில் மரணதண்டனை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
(வீரகேசரி)