மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு!

ந.குகதர்சன்-
ட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை லண்டன் செல்வ விநாயகர் ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், பேரவை பிரதி நிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவியை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர், லண்டன் செல்வ விநாயகர் ஆலய நிருவாகத்தினர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -