ஞானசார தேரர் பிணையில் விடுதலை!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

குறுந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஞானசார தேரர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்ய நீதிமன்றம் தடை விதித்திருந்த போதும் அதனை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 27 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்க்பட்டது. 

அதன்படி 26 பேர் நீதிமன்றில் ஆஜரான நிலையில் ஞானசார தேரர் மாத்திரம் வெளிநாடு சென்றுவிட்டார். 

இதனால் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில் இன்று நாடு திரும்பிய ஞானசார தேரர் குறுந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் சென்று சரணடைந்த பின் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கு ஜூலை 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -