மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கில் காணி உறுதியற்றோருக்கு உறுதி வழங்கல்!

ட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதி இல்லாமல் இருந்த கோறளைப்பற்று மேற்கு கிராம மக்கள் 52 பேருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு நாளை (27) கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் மாலை 3.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற இருக்கிறது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலபதி, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினி தேவி சார்ள்ஸ், அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் காணி உறுதிகள் இல்லாமல் இருக்கும் மக்களின் காணிகளுக்கு சரியான தீர்வினைப்பெற்று உறுதிகளை வழங்கவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -