மல்வத்தையில் குடும்பப் பெண்ணொருவர் கொலை!

பேரின்பராஜா சபேஷ்-
ம்பாறை - சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை புதிய வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் குடும்பப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மல்வத்தை புதிய வளத்தாப்பிட்டிக் கிராமம் அணைக்கட்டு வீதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவகி (வயது 54) என்ற குடும்பப் பெண்ணே கத்திக் குத்துக்கு இலக்காகி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இவரைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் புதிய வளத்தாப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை நல்லதம்பி (வயது 59) என்பவர் நஞ்சருந்திய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் சம்மாந்துறைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -