பிரதமர் ரணில் சம்பூர் பிரதேசத்துக்கு விஜயம்!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
திருகோணமலை சம்பூர் பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக் கிழமை (3) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழுகின்ற மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற 235 ஏக்கர் காணியையும் உரிமையாளர்களிடம் கையளிப்பது தொடர்பாகவும் மக்களுடன் கலந்துரையாடினார்.

கட்டைபறிச்சான், சம்பூர், கூனித்தீவு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் பிரதமர் சென்று அவற்றைப் பார்வையிட்டார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கூனித்தீவில் தரைமட்டமாக்கப்பட்டிருந்த பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்று அவ்விடத்தைப் பார்வையிட்ட பிரதமர், அந்தக் கோயிலை மீள நிர்மாணித்து பொது மக்களின் பாவனைக்கு விடுவதாகவும் மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

பிரதமருடன் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.ஏ.எம்.மஃறூபும் சென்றிருந்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -