மருதமுனையின் மண்வாசனையில் 'கல்வியா ? காதலா?' திரைப்பட வெளியீட்டு விழா!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை பாஹிம் ஜூவலரியின் தயாரிப்பில் உருவான கல்வியா ? காதலா ? திரைப்படத்தின் இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று மாலை (03-04-2015) கவிஞர் இக்பால் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

கவிஞர் இக்பால் கலைக்கழகத்தின் தலைவரும் உதவி இயக்குனருமான எம்.எம்.முகம்மட் முபீன் தலைமையில் நடைபெற்ற, இந்த விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி, பிரதம அதிதியாகக் கலந்த கொண்டு இறுவட்டை வெளியிட்டு வைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,ஆரிப் சம்சுதீன் ஆகியோர் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர். முதல் இறுவட்டை மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீர் பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இத்திரைப்படம் பற்றி எழுத்தாளர்களான உமா வரதராஜன்,சத்தார் எம் பிர்தௌஸ் ஆகியோர் உரையாற்றினார்கள். வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப், பிறைஎப்.எம்.அறிவிப்பாளர் எம்.ஏ.நஸிர் ஆகியோர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். 

ஊரின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட பெரும் அளவிலான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -