ஏறாவூர் நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் ஏறாவூர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
இன்று காலை நகரசபையில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றுக்காக தான் அங்கு சென்றிருந்தபோது திடீரென கூச்சலும் குழப்பத்துடனும் நகர சபைக்குள் பிரவேசித்த நபர்கள் தன்னைத் தாக்கியதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் நகர பிதாவின் ஆதரவாளர்களே தன்னை அவமானப்படுத்தி தாக்கியதாக அவர் பொலிஸ் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்றதை அறிந்து உடனடியாக நகரசபைக்கு விரைந்த ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் நகர சபையில் பொலிஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தியதோடு விசாரணைகளிலும் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூரப் பொலிஸார் தெரிவித்தனர்.
.jpg)