ஏறாவூர் நகரசபை உறுப்பினர் மீது தாக்குதல் -பொலிசில் முறைப்பாடு

பேரின்பராஜா சபேஷ்-
றாவூர் நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் ஏறாவூர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

இன்று காலை நகரசபையில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றுக்காக தான் அங்கு சென்றிருந்தபோது திடீரென கூச்சலும் குழப்பத்துடனும் நகர சபைக்குள் பிரவேசித்த நபர்கள் தன்னைத் தாக்கியதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் நகர பிதாவின் ஆதரவாளர்களே தன்னை அவமானப்படுத்தி தாக்கியதாக அவர் பொலிஸ் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்றதை அறிந்து உடனடியாக நகரசபைக்கு விரைந்த ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் நகர சபையில் பொலிஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தியதோடு விசாரணைகளிலும் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூரப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -