இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை உயர் அதிகாரி ஜபீருக்கு கௌரவம்



லங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி, 01.12.2025 முதல் தலைமைக்காரியாலயத்தில் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளராக உயர் பதவியுர்வு பெற்றுள்ள, சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட A. A. ஜபீர் அவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு 25.12.2025 அன்று Applebee Resort இல் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, ஓய்வு பெற்ற போதனாசிரியரும் அகில சமாதான நீதவானுமாகிய M. M. உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றிய A. A. ஜபீர் அவர்களின் சேவையை பாராட்டும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் பிரதம அதிதியாக A. A. ஜபீர் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அதேவேளை, விசேட அதிதிகளாக அம்பாரை மாவட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் M. B. நளீம் அவர்களும், நிந்தவூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், முன்னாள் போதனாசிரியருமான A. M. ஜமீல் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பயிற்சி உத்தியோகத்தர்கள், நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள், போதனாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை கௌரவித்தனர். அனைவரும் A. A. ஜபீர் அவர்களின் தொழில்முறை அர்ப்பணிப்பு, நிர்வாக திறமை மற்றும் பணியாளர்களுடன் கொண்ட நெருக்கமான அணுகுமுறை ஆகியவற்றை பாராட்டி உரையாற்றினர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, கௌரவிக்கப்படும் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட அனைவருக்கும் பகற்போசனை வழங்கப்பட்டு, நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இக்கௌரவிப்பு நிகழ்வு, ஒரு ஊழியரின் உழைப்பையும் சேவையையும் மதித்து பாராட்டும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.




















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :