கிழக்கில் வருமானம் குறைந்த விதவைப்பெண்களுக்கு சுயதொழில் முதலமைச்சர் ஏற்பாடு!

கிழக்கு மாகாணத்தில் வருமானமின்றி குடும்ப நடவடிக்கைகளுக்கு கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் கணவனை இழந்த விதவைப்பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்புகள் வழங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிழக்கு மாகண முதலமைச்சர் காரியாலயத்திற்கு விஜையம் செய்த UNHCR அதிகாரி கொலாம் அப்பாஸ் மற்றும் UNDP அதிகாரி சுபினாய் நன்டி ஆகியோர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தவேளையில் குறிப்பிட்ட விடையம் சம்மந்தாமக விரிவாக எடுத்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் முதலமைச்சின் செய்லாளர், பிரத்தியேகச் செயலாளர், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -