பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை ஆகாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய கேட்போர் கூடத்திற்கு ஒரு தொகுதி கதிரைகள் அன்பளிப்புச் செய்த நிகழ்வு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஆகாஸ் நிறுவனத்தின் தலைவரும் சத்திர சிகிச்சை நிபுணருமான டாக்டர் சித்திக் ஜெமீல் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபாவிடம் கையளித்தார்.
மேலும் ஆகாஸ் நிறுவனத்தினால் பாடசாலை உள்ளக வீதிச்சுவர்களுக்கு நிறம் பூசிக் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி.உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆகாஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.