குர்ஆனிக் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா -படங்கள்

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

லங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தின் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து 4வது முறையாகவும் குர்ஆனிக் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று (18) கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளரும் தூதரகத்தின் வதிவிடப் பிரதி நிதியுமான ஷெய்யத் ஹமிட் றிஷா ஹக்கிக்கி தலைமையில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சின் செயலாளர் அப்துல் மஜீத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறுக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், இலங்கைக்கான ஈரான் தூதரகத்தின் தூதுவர் இப்ராஹிம் ஹானி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -