யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு!

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் சிரமதான நிகழ்வு 19-04-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

(யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.எம்.சயீத் தலைமையில் இடம்பெற்ற இவ் சிரமதான நிகழ்வில் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உப தலைவர் எம்.எச்.எம்.அபீப்,கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.சிஹாப் உட்பட அதன் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி-அல்-ஹிறா மகா வித்தியாலயம் (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

குறித்த (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் சிரமதானம்,இரத்த தானம் ,கல்வி தொடர்பான இலவச வகுப்புக்கள் நடாத்துவது,நோயாளிகளை நலம் விசாரிப்பது போன்ற மனித நேயம் பேணும் சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -