த.நவோஜ்-
மட்டக்களப்பு - படையாண்டவெளி மாருதம் கலைக் கழகத்தினால் சிறப்பிக்கப்பட்ட 'மாருதத்தின் முத்தமிழ் முழக்கம்' கலை நிகழ்வு சனிக்கிழமை இரவு படையாண்டவெளி - பாலையடி நரசிங்க வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
ஆலய உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக சரித்திர நாடம், சமூக சீர்திருத்த நாடகம், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் 'அகலிகை', 'துமபே சுவாஹா' போன்ற நாடகங்கள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.
கலைக் கழகத்தின் தலைவர் ரீ.ஜெமஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளில் அதிதிகளாக ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.மௌனகுரு, கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரீ.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.
'மாருதத்தின் முத்தமிழ் முழக்கம்' கலை நிகழ்வுக்கு கலையம்சங்களைத் தாங்கி வருகின்ற பெற்றிநியூஸ் இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)