கருவாட்டில் ஆபத்து நுகர்வோர் அவதானம்!

புறக்கோட்டை சந்தைகளில் கருவாடு கொள்வனவு செய்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

வத்தளை பகுதியில் நேற்று கைப்பற்றப்பட்ட மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ஒரு தொகை கருவாடுகளில், 45 பெட்டிகள் புறக்கோட்டை சந்தைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சுக் தெரிவித்துள்ளார். 

இவற்றில் 1000 கிலோகிராம் கருவாடு இருந்துள்ளதோடு இது குறித்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நுகர்வுக்குத் தகுதியற்ற கருவாட்டு கொள்கலன்கள் இரண்டு நுகர்வோர் அதிகாரசபையினால் வத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -