சர்ச்சைக்குள்ளானது எதிர்க்கட்சித் தலைவர் விடயம்!

வெற்­றிலைச் சின்­னத்தில் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களும் யானைச்­ சின்­னத்தில் பாரா­ளு­ மன்றத்திற்கு தெரி­வான ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்­களும் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைத்­தி­ருக்­கின்ற நிலையில் இந் ­நாட்டின் எதிர்க்­ கட்சி எது என்றும் எதிர்க் ­கட்சி தலைவர் யார் என்றும் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் எழுப்பப்­பட்ட கேள்­வியால் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றன.

சபா­நா­ய­க­ரிடம் நாடு ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை என்றும் பாரா­ளு ­மன்­றமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் சுட்­டிக் ­காட்­டிய ஜன­நா­யக தேசிய கூட்­டணி எம்.பி. யும், ஜே.வி.பி. தலை­வ­ரு­மான அனு­ர­ கு­மார திசா­நா­யக்க பாரா­ளு மன்றத்தின் தற்­ போ­தைய நிலை­மை­க­ளையும் சம்­பி­ர­தா­யங்­க­ளையும் கவனத்திற் கொண்டு இந்­ நாட்­டையும் பாரா­ளு­ மன்­றத்­தையும் பிர­தி­நி­தித்­து வப்­ப­டுத்தும் எதிர்க்­ கட்சி தலைவர் யார் என்­பதை நியா­ய­மாக அறி­விக்­கு­மாறு கேட்­டுக்­கொண்டார். 

இதே ­போன்று ஜன­நா­யக தேசி­யக்­ கூட்­ட­ணியின் மாற்­றுக்­குழு உறுப்­பி­ன­ரான அஜித் ­கு­மார, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தினேஸ்­ கு­ண­வர்த்­தன, விமல்­ வீ­ர­வன்ச, அனு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா ஆகிய உறுப்­பி­னர்­களும் பிர­மதர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இணைந்து எதிர்க்­ கட்சி தலைவர் யார் என்­பதை ஆழ­மாக பரி­சீ­லித்து அறி­விக்­கு­மாறும் சபா­நா­யகர் சமல் ராஜ­பக்க்ஷவிடம் கேட்­டுக்­ கொண்­டனர். இதே­ வேளை இவ் ­வி­வ­காரம் தொடர்பில் சரி­யான தீர்மா­னத்தை அறி­விப்­ப­தாக சபா­நா­யகர் தெரி­வித்தார்.

பாரா­ளு ­மன்றம் நேற்று செவ்­வாய்க்­ கி­ழமை பிற்­பகல் 1.00 மணிக்கு சபா­நா யகர் சமல் ராஜ­பக்ஷ தலை­மையில் கூடி­யது. சபையின் பிர­தான நட­வ­டிக்­கை களின் பின்னர் சிங்­கப்­பூரின் தேச பிதா என வர்­ணிக்­கப்­படும் அந்­நாட்டின் 30 வருட கால பிர­தமர் அமரர் லீகுவான் யூவுக்கு அனு­தாபம் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து ஒழுங்கு பிரச்­சினை ஒன்றை எழுப்­பிய அனு­ர­கு­மார திசா­நா யக்க எம்.பி. எதிர்க் ­கட்சித் தலைவர் தொடர்­பான சர்ச்­சையை முன்­வைத்தார்.

இது தொடர்பில் அவர் விளக்­க­ம­ளிக்­கையில்,

நாம் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் இப்­ பா­ரா­ளு­மன்றம் செயற்­ப­டு­வ­தற்­கான நெறி முறை ஒன்று உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதே­ போன்று நிலை­யியல் கட்­ட­ளை­களும் இருக்­கின்­றன. அந்த வகையில் எதிர்க்­ கட்சித் தலைவர் தொடர்­பிலும் மேற்­ படி நெறி­ மு­றை­க­ளிலும் நிலை­யியற் கட்­ட­ளை­க­ளிலும் குறித்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

1977 ஆம் ஆண்டு முதல் 83 ஆம் ஆண்டு வரையில் ஆறு வரு­டங்­க­ளாக அப்பாத்­துரை அமிர்­த­லிங்கம் தனது 18 உறுப்­பி­னர்­க­ளுடன் எதிர்க்­ கட்சித் தலை­வ­ராக இருந்து வந்­துள்ளார். 1983 முதல் 1988 காலப்­ப­கு­தியில் அமரர் அனுர பண்­டா­ர­நா­யக்க 8 உறுப்­பி­னர்­க­ளு­டனும் அதன் பின்னர் 1989முதல் 1994 ஆம் ஆண்டு காலம் வரையில் 67 உறுப்­பி­னர்­க­ளுடன் அமரர் சிறி­மாவோ பண்டா­ர­ நா­யக்­கவும் 1994 ஆம் ஆண்டின் சில காலத்­திற்கு காமினி திசா­நா­யக் கவும் அதன் பின்னர் ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்கவும் எதிர்க் ­கட்சித் தலை­வர்­க­ளாக இருந்­தனர்.

இதன் பின் சில காலத்­துக்கு முன்னாள் பிர­தமர் ரத்­ன­சிறி விக்­கி­ர­ம­நா­யக்க எதிர்க் ­கட்சித் தலை­வ­ராக இருந்த அதே ­வேளை 2015 இன் முற்­ப­குதி வரையில் இப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­கவே எதிர்க் ­கட்சித் தலை­வ­ராக இருந்து வந்தார்.

அவர் எதிர்க் ­கட்சித் தலை­வ­ரா­கவும் ஐக்­கிய தேசி­யக்­ கட்சி எதிர்க் ­கட்­சி­யா கவும் இருந்த சம­யத்தில் அக்­கட்­சி­யி­லி­ருந்து பலர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து கொண்­டனர். எனினும் அவ்­வாறு அர­சுடன் இணைந்து கொண்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழு­காற்று நட­வ­டிக்­கையும் சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களும் மேற்­ கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

நிலைமை இவ்­வாறு இருக்­கையில் இன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் நடந்­தி­ருப்­பது என்ன? 

எதிர்க்­ கட்­சி­யி­லி­ருந்­த­வர்கள் இன்று அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை அந்­தஸ்­து­டைய அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றனர். சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கிய பதவி நிலை­களில் இருப்போர் இன்று அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றனர். எதிர்க் ­கட்சி உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக பதவி வகிக்கும் போது அதே­ கட்­சியைச் சேர்த்த ஒருவர் எதிர்க்­ கட்­சித்­த­லை­வ­ராக இருக்க முடி­யுமா? அத்­துடன் அக்­கட்­சி­யினால் எதிர்க் ­கட்­சி­யாக செயற்­பட முடி­யுமா?

இது எமது நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கும் அதே ­நேரம் பாரா­ளு­ மன்­றத்தின் சம்­பி­ர­தா­யத்­துக்கும் முர­ணா­ன­தாகும். இந்த பாரா­ளு­மன்­றத்தை கேலிக்­குட்­ப­டுத்தி விளை­யாட்டு வீடாக மாற்றி விட வேண்டாம் என்று கேட்­டுக் ­கொள்கின்றோம்.

பாரா­ளு ­மன்­றத்தின் ஜன­நா­ய­கத்­தையும் சம்­பி­ர­தா­யத்­தையும் பாது­காக்கும் பொறுப்பு சபா­நா­ய­க­ருக்கே இருக்­கி­றது என்­பதால் இவ்­வி­ட­யத்தில் சரி­யா­ன­தொரு தீர்­மா­னத்தை மேற்­ கொள்ள வேண்டும்.

சபா­நா­ய­க­ரிடம் இந்­நாடு ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்றம் மாத்­தி­ரமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே பாரா­ளு­மன்­றத்தின் கெள­ர­வத்தை சபா­நா­யகர் பாது­காக்க வேண்டும் என்றார்.

தினேஸ்;

இத­னை­ய­டுத்து தினேஷ் குண­வர்­தன கூறு­கையில் உலகின் கேலிக் கூத்­தான பாரா­ளு­ மன்­ற­மாக இலங்கை பாரா­ளு­மன்­றத்தை மாற்ற முனை­வது பயங்­க­ர­மான எதிர்­ வி­ளை­வு­க­ளையும் மக்கள் திசை திரும்பும் நிலைமை ஏற்­படும்.

சுதந்­திர கட்­சி­யினர் பெரும்­பா­லானோர் அர­சில் அமைச்சர் பத­வி­களை வகிக்­கையில் எப்­படி அக்­கட்­சியை சேர்ந்­தவர் எதிர்க்­ கட்சி தலை­வ­ராக பாரா­ளு­மன்­றத்தில் செயல் ­பட முடியும்.

பாரா­ளு­ மன்ற சம்­பி­ர­தாயம் மற்றும் முறைமை தற் ­போது சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே பாரா­ளு­ மன்­றத்தின் நிலை­யியற் கட்­ட­ளை­களை பாது­காப்­ப­தற்கும் மக்­களின் ஆணை தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­பட வேண்டும்.

எதிர்க் ­கட்சித் தலைவர் என்ற பதவி முக்­கி­ய­மா­னது. ஆளும் தரப்பு எதிர்த் ­தரப்பு என இரண்டு பிரி­வுகள் பாரா­ளு­ மன்­றத்தில் இருக்க வேண்டும். அதுவே சம்­பி­ர­தாயம். இன்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அதாவது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை எதிர்க்­ கட்­சியை சேர்ந்த பெரும்­பா­லானோர் அர­சுடன் இணைந்து அமைச்சர் பத­வி­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனவே சுதந்­திரக் கட்­சியை சேர்ந்­தவர் ஒருவர் எதிர்க்­ கட்சித் தலை­வ­ராக பதவி வகிக்க முடி­யாது.

எனவே பாரா­ளு­ மன்­றத்தின் முக்­கிய பத­வி­யாக எதிர்க்­ கட்சித் தலைவர் பத­வியை கேலிக்­ கூத்­தாக்க வேண்டாம். உலகின் கேலிக்­ கூத்­தான பாராளு மன்றமாக மாற்ற வேண்டாம். எனவே சபா­நா­யகர் இது தொடர்பில் அவ­தா­னத்­துடன் கவனம் செலுத்தி தீர்­மானம் எடுக்க வேண்­டு­மென்றும் தினேஷ் குண­வர்­தன எம். பி. தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச மற்றும் காலி மாவட்ட எம். பி. அஜித்­ குமார் ஆகி­யோரும் மேற்­ கண்­ட­வாறே கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

பிர­தமர்;

இத­னை­ய­டுத்து எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க கூறு­கையில் நான் எதிர்க் ­கட்சித் தலை­வ­ராக 11 வரு­டங்கள் இருந்தேன். அப்­போது இப்­ப­டி­யான பிரச்­சி­னைகள் எதுவும் எழ­வில்­லையே என்று நகைச்­சு­வை­யாக கூறி­ய­துடன் தேசிய அர­சாங்­கத்தில் எதிர்க்­ கட்­சியின் செயற்­பா­டுகள் என்ற ரீதியில் இங்­கி­லாந்தின் 1015 ஆண்டு கால பாரா­ளு­ மன்ற வர­லா­று­களை உதா­ர­ணப்­ப­டுத்தி பேசினார். 

அவர் மேலும் கூறு­கையில்,

எதிர்க் ­கட்சித் தலை­வரை நிய­மித்தல் என்­பது அர­சாங்­கத்தின் செயற்­பாடு அல்ல. இதனை எதிர்க் ­கட்­சி­களே தீர்­மா­னிக்க வேண்டும். எப்­படி இருப்­பினும் பாரா­ளு­ மன்­றத்­திற்­கென்று சம்­பி­ர­தாயம் ஒன்று கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்­ நி­லையில் தற்­ போது எழுந்­தி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளையும் நிலை­மை­க­ளையும் ஆராய்ந்து தீர்­மா­னிக்க வேண்­டி­யது சபா­நா­ய­கரின் பொறுப்­பாகும்.

இன்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சமூ­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை என்­பதால் அவர்­க­ளையும் இணைத்துக் கொண்டு பேச்­சுக்­களின் மூலம் முடி­வுக்கு வர­ வேண்டும். அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­ சட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டதன் பின்னர் அது தொடர்பில் செயற்­பட வேண்­டிய பாரிய பொறுப்­பொன்று எதிர்க் ­கட்சித் தலை­வ­ருக்கு இருக்­கி­றது. எனவே இவ்­ வி­ட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சுசில்;

இத­னை­ய­டுத்து எழுந்த முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த கூறு­கையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியில் 138 உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 120 பேர் அதில் அடங்குகின்றனர்.

இந் நிலையில் 26 பேரே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். அப்படியானால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்னும் 112 உறுப்பினர்கள் எதிர்க் கட்சியில் உள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை.

இந்த நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் விடயத்தில் சபா நாயகர் சரியான தீர்மானமொன்றை மேற் கொள்ள வேண்டும்.

அனுர பிரியதர்ஷன;

இதன் போது கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறுகையில் எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பில் இங்கு கேள்வியெழுப்புவோர் தேசிய நிறை வேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர். அப்படியானால் தேசிய நிறை வேற்று சபை தொடர்பிலும் இங்கு கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது என்றார்.

சபாநாயகர்;

இதனையடுத்து பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -