ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
இந்து சமுத்திரத்தின் நித்திலம்மென்றும் சிவபூமியென்றும் போற்றப்படுகின்ற ஈழமனித்திருநாட்டின் கிழக்குமாகாணத்தில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மட்டக்களப்பு – மயிலம்பாவெளி ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் மகோற்சவ தேர்திருவிழா பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
கடந்த 19ம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமான மகோற்சவத்தில் தினமும் பல்வேறு கிரியைகள் நடைபெற்றுவருகின்றனர்.
ஸ்ரீ சண்டிஹோமம் தீர்த்தோற்சவம் போன்ற கிரிகைகளுடன் எதிர்வரும் திங்கட் கிழமையன்று திருக்கல்யாணத்துடன் நிறைவுறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் தலைசிறந்த அந்தன சிவாச்சாரியப் பெருமக்கள் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் இப்பெருவிழாவில் கலந்துசிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.