சம்மாந்துறை குடும்பங்களின் வாழ்வாதாரம்!

 எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 55 குடும்பங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

சம்மாந்துறை கருவாட்டுக்கல் பிரதேசத்திலுள்ள அல்-மதீனா மகளிர் அமைப்பில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட வாழ்வாதார உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

சம்மாந்துறை கருவாட்டுக்கல் அல்-மதீனா மகளிர் அமைப்பின் தலைவி எஸ்.ரசீனா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பாலர் பாடசாலை ஒன்றியத்தின் தலைவர் எம்.எம்.ஜூனைதீன், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உதியோகத்தர், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது மக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -