சம்மாந்துறை நெயினாகாடு,இறக்காமம் ஊடாக அம்பாரை நகரிக்கு பஸ் சேவை ஆரம்பிக்க நடிவடிக்கை!

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை நெயினாகாடு, குடுவில், இறக்காமம் ஊடாக அம்பாரை நகரிக்கு பிரதேச மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் அவர்களின் முயற்சியால் புதிய பஸ் சேவை ஆரம்பிக்க நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வீதியினுடாக பஸ் சேவை ஆராம்பிப்பதற்கான பரீட்சார்த்தமாக நெயினாகாடு குடுவில் வீதியின் நிலையை இன்று நேரில் சென்று பார்வையிட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் அவர்களின் தலைமையில் சம்மாந்துறை போக்குவரத்து சபை நிலையப் பொறுப்பதிகாரி எம்.தாஸிம்,இறக்காம பிரதேச சபை தவிசாளர் மௌலவி ஏ.எல்.ஜபீர், உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பிரதேச வாசிகள் என பலரும் வீதியை பார்வையிட சென்றனர்.

இதன்போது குடிவில் நெயினாகாடு வீதியினுடாக பஸ் சேவையினை ஆராம்பிக்க சாதக நிலைமையினையும் மற்றும் வீதியில் உள்ள திருத்த வேலைகளை மேற் கொள்ளத்தேவையான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் வேண்டுகோள் விடுத்தனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -