கிழக்கு மாகாண சபையில் மாகாண தேசிய அரசாங்கம் போன்ற மாதிரிய உருவாக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
கட்சித் தலைமையகமான தாருசலாமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இந்த அழைப்பை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் இந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொதுத் தேர்தலின் பின்னர் மத்தியில் அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தைப் போல, கிழக்கு மாகாண சபையிலும் இணக்க அரசியல் ஒன்றை ஏற்படுத்த அந்த கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
