ஐ.நா.விசாரணை அறிக்கையை பிற்போட வேண்டிய அவசியமில்லை!

லங்­கை உள்­நாட்டு விசா­ரணை பொறி­மு­றை­களை செயற்­ப­டுத்துகின்றது என்பதற்காக ஐ.நா.விசா­ரணை அறிக்­கை­யை பிற்­போட வேண்­டிய அவ­சியம் இல்லை. மார்ச் மாதம் விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வது இலங்­கையில் உள்­நாட்டு பொறி­மு­றையை பலப்­ப­டுத்த வாய்ப்­பாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் நல்­லி­ணக்­கத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதைப் போல் உண்­மை­களை கண்­ட­றி­யவும் செயற்­பட வேண்டும்.

அதற்கு இதுவே மிகச் சரி­யான தரு­ண­மெ­னவும் கூட்டமைப்பு சுட்டிக் காட்­டி­யது. இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்­கை­யினை பிற்­போடக் கோரி அரசு வலி­யு­றுத்தி வரும் நிலையில் இது தொடர்பில் வின­விய போது கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

உண்மை வெளி­வ­ரு­வது தவ­றெ­னவோ அல்­லது இப்­ப­டி­யா­ன­தொரு சூழ்­நி­லையில் உண்மை வெளி­வ­ரு­வது தவ­றெனவோ எவரும் தெரி­விக்க முடி­யாது. அதிலும் விசே­ட­மாக ஒரு நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்­டு­மாயின் அது உண்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­வதில் மட்­டுமே ஏற்­ப­டுத்­தப்­பட முடியும். உண்­மை­களை மறந்து, இறுதி யுத்­தத்தில் என்ன நடந்­தது என்­பதை மறந்து நாட்டில் இன நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும்.

வட­மா­காண சபையில் கொண்டு வரப்­பட்ட பிரே­ரணை கற்­ப­னை­யா­னதோ எவர் மீதும் குற்றம் சுமத்துக் கூடிய வகையில் பொய்­யாக தயா­ரிக்­கப்­பட்­டதோ அல்ல. இதில் வடக்கில் நடந்த உண்­மை­க­ளையே தெரி­விக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்­களில் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையில் உண்மை என்ற பதத்­திற்கே இடம் வழங்­கப்­ப­ட­வில்லை. இனப்­ப­டு­கொ­லைக்­கான உண்மை கண்­ட­றி­யப்­ப­டாது எவ்­வாறு நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது? ஆனால் கடந்த அர­சாங்கம் அதையே செய்து வந்­தது.

எனவே இப்­போதும் அதே தவ­றினை செய்யாது உண்மை நிலை­மை­களை உட­ன­டி­யாக கண்­ட­றி­யப்­பட வேண்டும். எனவே இந்­தியா மற்றும் ஏனைய சர்­வ­தேச நாடுகள் தற்­போது நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்த நல்ல சந்­தர்ப்பம் என தெரி­விக்­கு­மாயின் இது தான் உண்­மை­யினை கண்­ட­றிய நல்ல நேரம் என்­ப­தையும் இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே சர்­வ­தேச அறிக்­கை­களை வெளி­யிட இதுவே பொருத்­த­மான தருணம்.

அதேபோல் ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை அறிக்­கை­யினை இலங்கை அர­சாங்கம் பிற்­போட வலி­யு­றுத்­து­வ­தற்­கான மிகச் சரி­யான கார­ணங்­களை முன்­வைக்க வேண்டும். இல்­லையேல் எம்மால் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுடன் இணங்கிச் செயற்­பட முடி­யாது. 

இலங்­கையின் உள்­ளக பொறி­மு­றை­க­ளுக்கு இலங்கை அரசு முக்­கி­யத்­துவம் கொடுப்பதைப் போல் சர்வதேச விசாரணைக்கு இடமளித்து அவர்களுடன் இணங்கி செயற்பட தயாரெனின் அதேபோல் இலங்கை அரசு கேட்கும் கால அவகாசத்தினுள் சர்வதேச பொறிமுறையுடன் இணைந்து அடுத்த கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளுமாயின் அது தொடர்பில் நாம் பரிசீலிப்போம் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -