பேருவளைக்குச் சென்று உவைஸின் வீட்டில் பகலுணவுண்டார் மகிந்த ராஜபக்க்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பேருவளை , சீனங் கோட்டைக்கு நேற்று 03 ஆம் திகதி சென்றுள்ளார் . பேருவளை ஸ்ரீ .லங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் காலம் சென்றஎம். எஸ். எம். பஸீல் இல்லத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியை பஸீல் புதல்வர் அஸாம் வரவேற்றுள்ளார்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேருவளை நகர பிதா மில்பர் கபூர், முன்னாள் நகர பிதா மர்ஜான் அஸ்மி மற்றும் குடும்பத்தினர் தனக்காக பாடுபட்டதை மஹிந்த நினைவுகூர்ந்துள்ளார். எதிர்காலத்திலும் பஸீல் ஹாஜியார் குடுத்பத்தினதும் பேருவளை மக்களினதும் பங்களிப்பு தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

இதன்போது வக்பு சபை முன்னாள் தலைவர் அஹ்கம் உவைஸின் இல்லத்திற்கு சென்ற மஹிந்த அங்கு பகலுணவை உட்கொண்டுள்ளார் . அஸ்ஸெய்யித் அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் இச்சந்திப்பில் பங்குபற்றியுள்ளனர்

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக , பொது பல சேனா போன்ற இன,மதவாத தீவிரவாத அமைப்புகள் பெரியளவில் செயல்பட்டமையும் , அவற்றுக்கு எதிராக சட்டத்தை மஹிந்த அரசாங்கம் செயல்படுத்த மறுத்து வந்தமையும் , குறிப்பிடத்தக்கது , அதேவேளை பொது பல சேனா போன்ற அமைப்புக்களின் இன ,மதவாத பிரசாரம் ,மற்றும் நடவடிக்கைகளினால் அலுத்கம, பேருவளை எரியூட்டப்பட்டமையும் அதற்கு பின்னரும் கூட் மஹிந்த அரசாங்கம் பெளத்த தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த மறுத்து வந்தமையும் இங்கு சுடிகாட்டத்தக்கது.LM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -