இலங்கைக்கான விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ் விஜயம்!

லங்கைக்கான விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ். குடாநாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு தரப்பு விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் ஒருவர் 25 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இரு தரப்பு விஜயம் மேற்கொண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

தனது இலங்கை விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -