தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கல்வியற் கல்லூரி மாணவிக்கு உதவி!

மிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கற்றல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா எல்லப்பர் மருதன்குளத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக சிறியளவு நிதியுதவியினை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை வழங்கியது. 

இவ் நிகழ்வு இன்றைய தினம் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் இவ் உதவியினை தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் மாணவியின் தாயாரிடம் வழங்கி வைத்தார்.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், ஊடகப் பிரிவைச்சேர்ந்த திரு செ.சுகந்தன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -