பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன்னர் தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் போது பிரதம நீதியரசர் தொடர்பிலான பிரச்சினை தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
பல்வேறு சந்தர்ப்பங்கள் வழங்கிய போதும் எந்தவித பலனும் இன்மையாலேயே மீண்டும் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக பதவியேற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்தே கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துமாறு எதிர்கட்சியினர் விடுத்த வேண்டுகோளை அடுத்து ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.