வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையினால் வெங்காயம் அறுவடை!

த.நவோஜ்-

வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்கிழமை காலை அறுவடை செய்யப்பட்டது.


பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் காசிப்பிள்ளை சித்திரவேல், வாகரை பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார், பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்து அறுவடையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

திணைக்களங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டியை முன்னிட்டு வாகரை பிரதேச சபையின் வளாகத்தினுள் மரக்கறித் தோட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இம்முறை வெங்காயம் அதிகூடிய விளைச்சலைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -