காரைதீவு விபுலாநந்தா மொன்டிசேரியின் விபுலவிழுதுகளின் விடுகை விழாவானது 30.11.14ம் திகதி அன்று காரைதீவு விபுலாநந்த மணிமண்டபத்தில் பணிபாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களும் கெளரவ அதிதியாக திரு.வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் சிறப்பு அதிதிகளாக திரு.ஏ.சசிகரன், Dr.பி.சுரேஸ்குமார், திரு.பி.ஸ்ரீகாந், திரு.எம்.கேந்திரமூர்த்தி ஆகியோருடன் பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவின் போது சிறார்களின் பல கலை நிகழ்ச்சிகளுடன் புலமை பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், அடுத்த வருடம் தரம் - 01க்கு பாடசாலைக்கு செல்லும் விடுகை பெறும் விபுலமணிகளும் பரிசில் வழங்கி கெளரவிக்கபட்டதுடன் மொன்டி சேரியின் ஆசிரியைகளும் கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment