5ம் தர புலமைப் பரிசில் வெற்றி பெற்ற இறக்காமம் பிரதேச மாணவர்கள் கௌரவிப்பு!

எஸ்.எம்.சன்சீர்-

றக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் இவ்வாண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்குமான பரிசளிப்பு விழா நேற்ரு திங்கட்கிளமை (2014-12-01)காலை 9.00 கல்லூரியின் அதிபர் ஹாஜியானி ஐனுல் றிபாயா முஹம்மட் நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் M.T.A.நிஸாம் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.S.நஜீம் அவர்களும்

மேலும் விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சம்மாந்துறை S.M.M.S.உமர் மெளலான, M.H.M ஜாபீர் மற்றும் கோட்டக் கல்வி அதிகாரி இறக்காமம் U.L.மஹ்மூட் லெவ்வை ஆகியோரும், கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கப்படுவதுடன் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெறுமதியான பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்சி களும் இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :