திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் நாளைய இளம் தலைவர்கள் கௌரவிப்பும், விளையாட்டுக் கழகங்களுக் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேவை கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றது
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்;தினதும் விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தினதும் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜஹான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.நஜீம், சாய்ந்தருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஏ.ஏ.அஸ்வத் அலி, விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம்.ரஜாய் மற்றும் விளையாட்டுக் கழங்களினதும், இளைஞர் கழகங்களினதும் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஆறு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் 22 இளைஞர்கள் கழகங்கள் என்பவற்றிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 32 நாளைய இளம் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோரது சேவைகளைப் பாராட்டி சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் என்பன இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment