கைது செய்த பொலிசாரின் செயலினால் 37 மாணவ, மாணவிகளும் 06 ஆசிரியர்களும் அடங்களாக குறித்த மாணவியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து பொலிசில் காத்து நிற்கின்றனர்.
இது சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தள செய்திப்பிரிவு கல்முனை அல்-பஹ்ரியா பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது:
பாடசாலை சுற்றுலா ஒன்றிற்காக சென்றிருந்த வேளை ஒரு மாணவி சீகிரியாவில் உள்ள ஒரு ஓவியத்தில் எழுதினார் என்ற குற்றத்தில் சீகியாவிற்கு பொறுப்பாக இருக்கின்ற காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளனர். அதனால் அம்மாணவியை அழைத்துச்செல்ல சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் இதனால் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலாச்செல்கின்றபோது மாணவர்களுக்கான விளிப்புணர்வு, அறிவூட்டல் முக்கியமாக நடைபெறவேண்டும், எவைகள் செய்யவேண்டும் எவைகள் செய்யக்கூடாது, என்பன கட்டாயம் சொல்லிக்கொடுத்து அழைத்துச்செல்ல வேண்டும். சில மாணவர்கள் இன்னும் குழந்தைகளாக சிறுபிள்ளைத்தனத்துடன் செயற்படுவதால் அறிவூட்டல் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதனைக்கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

0 comments :
Post a Comment