சலீம் றமீஸ்-
மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினால் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள மக்கள் வாழும் பிரதேசமான நாமல் ஓயா மக்களின் நலன் கருதி நாமல் ஓயா முகாங்களை வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இவ்வீதிக்கான ஆரம்ப நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளரும், நாமல் ஓயா பிரதேச சபை உறுப்பினருமான சுஹத் ரத்ன தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் விமலவீரதிஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிரியானி, நாமல் ஓயா பிரதேச சபை தவிசாளர் பாலித புஸ்பக்குமார, பிரதேச சபை உறுப்பினர் லலீத் லங்க உட்பட உயரதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment