சாய்ந்தமருதில் வீட்டில் திடீர் தீ விபத்து -படங்கள்



இஷாக்-

சாய்ந்தமருது இரண்டாம் பிரிவு ஜமாஹிரியா வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு  (27)  8.15 மணியளவில் மின் கசிவினால் எம். லாபீர் என்பவரது வீடு முற்றாக சேதமாகியுள்ளது.

இத்தீயினை அணைக்க அயலவர்கள் முயற்சித்த போதும் பயனளிக்காமல் இத்தீ பரவி வீடு முற்றாக சேதமடைந்துள்ளது,

சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, பொதுமக்கள் ஆகியோரின் முயற்சியினால்  தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

திடீர் என தீ பரவியதை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி உயிர் தப்பியுள்ளனர் .

இத்தீ விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :