உயர் ­நீ­தி­மன்­றத்தின்ஆலோசனைக்கு எதி­ரா­க வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்­கை -அஸாத் சாலி

னா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்ற உயர்­நீ­தி­மன்­றத்தின் ஆலோ­ச­னைக்கு எதி­ராக அதி­கா­ரத்தைப் பகிர்ந்து ஐக்­கி­யப்­படும் இயக்கம் வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அசாத் ­சாலி தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மூன்­றா­வது முறை­யாக ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக களம் இறங்­கலாம் என்­பது உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்பு அல்ல. ஆலோ­சனை மட்­டுமே. அதற்கு எதி­ராக யாரும் வழக்குத் தாக்கல் செய்­யலாம். நாமும் நிச்­ச­ய­மாக வழக்குத் தாக்கல் செய்வோம் என்று அவர் மேலும் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் கொழும்பில் நடை­பெற்ற அதி­கா­ரத்தைப் பகிர்ந்து ஐக்­கி­ய­படும் இயக்கம் ஏற்­பாடுசெய்­தி­ருந்த ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் இது­வரை அதி­கா­ர­பூர்­வ­மாக எவ்­வித அறி­விப்பும் தேர்­தல்கள் ஆணை­ய­கத்­தினால் வெளி­யி­டப்­ப­டாத நிலையில் ஜனா­தி­பதி மஹிந்த தனது தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் வெளிப்­பட்­டுள்ளார். அவ­ரது வெற்­றிக்கு வழி­வ­குக்கும் வகை­யி­லான இராசி­யான தினத்­தி­லேயே தேர்தல் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

உண்­மையில் 4 வருட முடிவில் தேர்­தலில் போட்­டி­யிட விரும்­பினால் அது தொடர்பில் தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு ஜனா­தி­பதி அறி­விக்க வேண்டும். மாறாக அவரே நாள்­கு­றித்து தனக்கு ஏற்ற நாள் போல தேர்தல் நடத்­து­வா­ராயின் இங்கு ஜன­நா­யகம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு தேர்­தல்கள் ஆணை­ய­கத்தின் நிலைப்­பாடு ஜன­நா­யகம் இல்­லாத சர்­வா­தி­கார ஆட்­சியை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

தேர்தல் பிர­சா­ரத்­தினை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தற்­போது அதி­கா­ர­பூர்­வ­மற்­ற ­வ­கையில் நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றார்.

கிரா­மப்­பு­றங்­களில் இருந்து பஸ் வண்­டிகள் மூலம் அனு­தி­னமும் மக்கள் வர­வ­ழைக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு 'தன்சல்' வழங்­கப்­ப­டு­கின்­றது. கொழும்பில் பிர­தான இடங்­களில் மின்­சாரப் பல­கைகள் மூலம் ஜனா­தி­பதி செய்த நலத்­திட்­டங்கள் பிர­சா­ரப்­ப­டுத்­தப்­­ப­டு­கின்­ற­து. இது தேர்தல் வரை­மு­றை­களை மீறும் செய­லாகும்.

மேலும் தேர்தல் காலம் நெருங்கி விட்டால் ஜனா­தி­பதி கூறும் முக்­கிய விடயம் புலிகள் என்று எதிர்க்­கட்­சி­யி­னரை வர்­ணிப்­பது புலம்­பெயர் தமி­ழர்­களை புலி­முத்­திரை குத்­திப்­பே­சு­வது யுத்த வெற்­றியைப் பற்றி பேசிப்­பேசி இனத்துவே­சத்தை விதைப்­பது. உண்­மையில் தீவி­ர­வாதி என்றும் 24 கப்­பல்­க­ளுக்கு சொந்­தக்­காரர் என்றும் கூறியும் கே.பி. யை கைது செய்­தது இப்­போது கே.பி. அர­சாங்­கத்­துடன் உள்ளார் அவ­ரிடம் இருந்த கப்­பல்கள் எங்கே?

தமிழ் மக்­க­ளிடம் இருந்து சூறையா­டிய தங்க நகை­களில் ஒரு பகு­தியை தேர்­த­லினை நோக்­காக வைத்து திருப்­பிக் ­கொ­டுத்த மஹிந்த தமிழ் மக்­க­ளிடம் இருந்து கைப்­பற்­றிய முழு­த் தங்க ஆப­ர­ணங்­க­ளையும் மக்­க­ளுக்கு திருப்பி வழங்க வேண்டும்.

தற்­போது எதிர்­க்கட்­சி­களின் பொது வேட்­பாளர் யார் என்று மஹிந்த கேள்வி எழுப்­பு­கின்றார். தேர்­தலை இன்னும் அறி­விக்­க­வில்லை. ஜனா­தி­பதி கரு­ ஜெ­ய­சூ­ரி­ய­வை பொது­வேட்­பாளர் என்று வாழ்த்துத் தெரி­வித்­தி­ருக்­கிறார். இவை அனைத்தும் தேர்­தலை கண்டு ஜனா­தி­பதி மஹிந்த அச்சம் அடைந்துவிட்டார் என்­ப­தனை தெளி­வு­ப­டுத்­து­கின்­றது.

இன்று அவ­ரது நிறை­வேற்று அதி­கார சர்­வா­தி­கார ஆட்­சியை அர­சாங்க அமைச்­சர்­களே எதிர்க்­கின்­றனர். அத்­தோடு ரத்­ன­தேரர் 18ஆம் திருத்­தத்­திற்கு வாக்­க­ளித்­ததை நினைத்து கவ­லை­கொள்­வ­தா­கவும் 19ஆம் திருத்தம் வேண்டும் என்றும் கோரு­கின்றார். இவை அனைத்தும் மஹிந்­த­விற்கு எதி­ரான எதிர்­ப்ப­லை­க­ளே­யாகும்.

வழ­மை­யாக கட்­சி­களில் பிணைப்­புக்­களை ஏற்­ப­டுத்தி அதனை பிள­வு­ப­டுத்தும் ஜனா­தி­பதி தற்­போது சங்க சபாவை தனது அர­சியல் நோக்­கத்­திற்­காகப் பிள­வுப்­ப­டுத்­தி­யுள்ளார். இதனை பௌத்­தத்­து­ற­விகள் கூட மன்­னிக்க மாட்­டார்கள்.

மேலும் தமிழ் மக்­களின் 65 ஆயி­ரம் ஏக்கர் காணியைப் போன்று முஸ்லிம் மக்­க­ளிடம் இருந்து கைப்­பற்­றிய 30 ஆயிரம் ஏக்கர் காணி நிலங்­களை அவர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும். இந்த நாட்டில் பொலிஸ், கல்வி, நீதி என்று எந்த துறையிலும் அதிகாரம் சுதந்திரம் இல்லை. அனைத்துமே ஒருவராலேயே நிர்வகிக்கப்படுகின்றது.

இது ஜனாதிபதித் தேர்தலில் 3 ஆவது முறையாக மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவது தொட்டு அவரது பிரசார நடவடிக்கை உயர்நீதிமன்ற ஆலோசனை என்று அனைத்திலும் வெளிப்படுகின்றது. எனவே, இதனை தடுக்க வேண்டியது எமது கடமை. இதற்காக நாம் போராடுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :