அர­சாங்­கத்தின் தீர்­மா­னங்­களை பொறுத்தே யாருக்கு ஆத­ரவு என்­பதை முடி­வெ­டுப்போம்-ஹஸன் அலி

முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு எட்­டப்­படும் என அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது. எனினும் அர­சாங்­கத்தின் தீர்­மா­னங்­களை பொறுத்தே ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு ஆத­ரவு என்­பதை முடி­வெ­டுப்போம் என தெரி­விக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், எவ­ரு­டனும் கூட்­டுச்­சேர இதுவரை முடி­வெ­டுக்­க­வில்லை எனவும் குறிப்­பிட்­டது.

ஜனா­தி­பதி தேர்­தலில் மு.கா.வின் நிலைப்­பாடு

என்­ன­வென வின­விய போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹசன் அலி எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­பட வேண்டும். தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தைகள் நடத்­து­வ­தனால் பலன் எதுவும் கிடைக்­கப்­ப­ட­வில்லை. 2005 ஆம் ஆண்டு அர­சுடன் கூட்­டுச்­சேரும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சில கோரிக்­கை­களை முன்­வைத்­தது. அவை இன்னும் முழு­மைப்­ப­டாத கார­ணத்­தினால் தொடர்ச்­சி­யாக அரச தரப்­புடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டோம். நேற்று முன்­தி­னமும் அரச தரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி எமது கோரிக்­கைகள் தொடர்பில் பேசினோம். எமது கோரிக்­கை­களை ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுப்போம் என தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் உள்­ளூ­ராட்­சி­மன்ற தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. கரை­யோர பிர­தேசப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு எட்­டப்­ப­ட­வு­முள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அர­சாங்­கத்தை உதா­சீனப் படுத்த முடி­யாது. முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­பட்டு ஏதேனும் ??????? கிடைக்­குமா என்­ப­தையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எது எவ்­வாறு இருப்­பினும் இன்­னமும் நாங்கள் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்­மானம் எதுவும் எடுக்­க­வில்லை. வாக்­கு­று­திகள் கொடுப்­பதை விடவும் அவற்­றினை உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும். அது­வ­ரையில் ஆத­ரவு யாருக்கு என்­பது தீர்­மா­னிக்­கப்­ப­டாது.

ஜே.வி.பி.யுடன் பேச்சு

அதேபோல் நேற்று முன்­தினம் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்தோம். இதில் எவ­ரு­டனும் கூட்­டுச்­சேரும் வகையில் பேச­வில்லை. எமது நிலைப்­பாடு என்ன? நாங்கள் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பவற்றையே பேசினோம். பொது கூட்டணியில் களமிறங்குவது அல்லது எதிரணியினை ஆதரிப்பது என்ற எந்தவொரு முடிவும் நாம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :