'துரு மித்துரு' வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

 பைஷல் இஸ்மாயில்-

லங்கை வங்கியின் 75 ஆவது வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் 'துரு மித்துரு' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (20) அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.சீ.கியாஸ்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இலங்கை வங்கியின் நிருவாக உத்தியோகத்தர் எ.எம்.எ.மஜீட், காசாளர் எஸ்.எல்.விஜயதுங்க, எழுது வினைஞர் ஏ.ஜீ.தஸ்தகீர், ஓய்வுபெற்ற முகாமையாளர் ஏ.எம்.சாபுர், ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர் எம்.எல்.எம்.பாறூக் ஆகியோர் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வுக்கு பல வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :