இலங்கை வங்கியின் 75 ஆவது வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் 'துரு மித்துரு' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (20) அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.சீ.கியாஸ்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இலங்கை வங்கியின் நிருவாக உத்தியோகத்தர் எ.எம்.எ.மஜீட், காசாளர் எஸ்.எல்.விஜயதுங்க, எழுது வினைஞர் ஏ.ஜீ.தஸ்தகீர், ஓய்வுபெற்ற முகாமையாளர் ஏ.எம்.சாபுர், ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர் எம்.எல்.எம்.பாறூக் ஆகியோர் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வுக்கு பல வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர்.
0 comments :
Post a Comment