சம்மாந்துறை மலங்கு மஸ்தார் முதியோர் சங்கத்துக்கு உபகரணம் வழங்கள்





எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மலங்கு மஸ்தார் முதியோர் சங்கத்தில் அங்கத்தவர்களாகவுள்ள 23 குடும்பங்களுக்கு இடியப்பம் அவிக்கும் சட்டி மற்றும் 27 விவசாய குடும்பங்களுக்கு மண்வெட்டி என்பன இன்று ஞாயிற்றுக்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சவூதி தூதுவர் ஆலய வெகுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீசிடம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

முதியோர்களின் வாழ்கையில் ஒளியூட்டும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஓதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட சுயதொழில் முயற்சிக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு மலங்கு மஸ்தார் முதியோர் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் மலங்கு மஸ்தார் முதியோர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் சவூதி தூதுவர் ஆலய வெகுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது ஆசிரியர் எம்.ஏ.மஜீட், வை.பீ.சலீம், உயர் அதிகாரிகள், மலங்கு மஸ்தார் முதியோர் சங்க பிரதிநிதிகள், முதியோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :