ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வடபகுதி விஜயம் -படங்கள்.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

மைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடபகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கிளிநொச்சியில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

உலங்குவானூர்தியில் இன்றைய தினம் வந்திறங்கிய ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார்.

இக்குழுவில் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்த்திரி அலென்ரின் (உதயன்) உனைஸ் பாரூக், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆகியோர் உடனிருந்தனர்.

கிளிநொச்சிக்கு வருகைதந்த ஜனாதிபதி மாவட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள அதேவேளை நாளைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :