நிதிமோசடி போன்ற விடயங்கள் எல்லாம் ஒன்றும் பெரிய விடயங்கள் கிடையாது என்று ஞானசார தேரர் கர்ஜித்துள்ளார்.பொதுபல சேனாவின் பிரதிச் செயலாளர் வெல்லம்பிடியே சுமண தம்ம தேரர் முறைகேடான
வகையில் விகாரையொன்றுக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்து லட்சக்கணக்கிலான பணத்தைச் கொள்ளையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டது குறித்து இணையத்தள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
வெல்லம்பிடிய சுமண தேரரின் கைது தொடர்பாக ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது ஞானசார தேரர் எரிந்து விழுந்துள்ளார். தமது அமைப்பின் பிரதிச் செயலாளர் முறைகேடு செய்திருப்பது உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ள அவர், பணமோசடி ஒன்றும் பெரிய குற்றம் கிடையாது என்றும் வலியுறுத்தியுள்ளாராம் .
மேலும் வெல்லம்பிடிய சுமண தேரரின் நடவடிக்கை காரணமாக தமது அமைப்புக்கு எந்தவித கெட்டபெயரோ நெருக்கடியோ ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment